காடுகளைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் உலக நாடுகள் பல உறுதிமொழிகளை எடுத்துக்கொண்ட போதிலும் 2022ஆம் ஆண்டில் காடழிப்பு தீவிரமடைந்துள்ளதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. இது 2030ஆம் ஆண்டுக்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய வருடாந்திர இலக்குகளில் 21% பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதாக வும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
2030ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை ஒழித்து 350 மில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலத்தை மீட்டெடுப்ப தற்காக நாடுகள், நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் உறுதிமொழிகளின் தற்போதைய நிலையை மதிப்பிடும் ஒரு புதிய ஆய்வை பல்வேறு குடிமைச் சமூகங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளின் கூட்டணி மேற்கொண்டது. 2022 ஆம் ஆண்டில், காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுப்பதில் உலகளாவிய முன்னேற்றம் மிகவும் மெதுவாக நகர்ந்ததாகவும், சில சந்தர்ப்பங்களில் மோசமடைந்த தாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
குறிப்பாக, 2022ஆம் ஆண்டில் உலகளவில் ஏறத்தாழ 66 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டதாகவும் இது 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் 4 விழுக்காடு அதிகம் எனவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. கால்நடை வளர்ப்பு, சோயா, பாமாயில் உற்பத்தி மற்றும் குறு விவசாயம் உள்ளிட்ட செயல்பாடுகள் காடு இழப்பிற்கு முன்னணி காரண மாக இருக்கின்ற நிலையில், சாலை விரிவாக்கம், தீ விபத்து மற்றும் வணிக ரீதியான மரம் வெட்டுதல் ஆகியவையும் காட ழிப்பில் பங்கு வகிப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
2022ஆம் ஆண்டில் காடழிப்பினால் மட்டும் வெளியான பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வு 2021ஆம் ஆண்டு டன் ஒப்பிடுகையில் 6 விழுக்காடு அதிகம் எனவும் 1970 முதல் 2018 வரையிலான காலத்தில் உயிர் வாழவும் இனப் பெருக்கத்திற்கும் காடுகளை நம்பியிருந்த உயிரினங்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. - தகவல் : பூவுலகின் நண்பர்கள்